உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.77 மீ., துாரம் எறிந்து பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான மானு , கிஷோர் ஆகியோரும் பைனலுக்கு முன்னேறினர்.இந்நிலையில், இன்று நடந்த பைனலில், தனது 2வது முயற்சியில் 88.17 மீ., தூரம் வீசிய நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
இதன் மூலம், இந்தியாவுக்கு உலக தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தி சாதனை படைத்துள்ளார். மேலும், உலக தடகளத்தில் இரு பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அவர் கடந்த முறை (2022, அமெரிக்கா) வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கிஷோர் 5வது இடமும், மானு 6வது இடமும் பிடித்தனர். பாகிஸ்தான் வீரர் நதீம் வெள்ளி வென்றார். செக் குடியரசை சேர்ந்த ஜாகுப் வெண்கலம் வென்றார்.