fbpx

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்..!! தங்கம் வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன்..!!

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். இவர், 252.2 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒகேன் முல்லர் 251.9 புள்ளிகள் உடன் வெளி பதக்கத்தை பெற்றார். சீனாவின் ஜாங் ஜியாலேவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

இதேபோல், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சந்தீப் சிங் 628.2 புள்ளிகளை பெற்று 14-வது இடத்தை பிடித்துள்ளார். பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

”விநாயகர் சிலையை விற்கக் கூடாது”..!! தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள்..!!

Sun Sep 17 , 2023
நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சில யோசனைகளுடன், “நெல்லை பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை” என்று உத்தரவிட்டார். மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் […]

You May Like