fbpx

உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிரொலி..!! இனி அனைத்து மாணவர்களுக்கு பயிற்சி..!! பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு..!!

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிரொலியாக, முதலீடு செய்த நிறுவனங்களுக்கு ஏற்ப “நான் முதல்வன்” திட்டத்தில் இனி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில், எந்தெந்த துறையில் அதிக முதலீடுகள் வந்தனவோ, அதற்கு ஏற்றாற்போல் பயிற்சி வழங்க வேண்டுமென என உத்தரவிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

பஸ் ஸ்டிரைக்..!! தலைகீழாக மாறிய பேருந்து சேவை..!! ஊழியர்களுக்கு அரசு வெளியிட்ட எச்சரிக்கை..!!

Wed Jan 10 , 2024
தமிழ்நாடு முழுவதும் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது. முதல் நாளான நேற்று, விடுப்பில் சென்றவர்கள், வார விடுமுறையில் இருந்தவர்கள், முன் அனுபவம் இல்லாதவர்களை வைத்து பேருந்தை இயக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் நாளான இன்று தலைகீழாக மாறி, பேருந்து சேவை பல இடங்களில் முடங்கியுள்ளது. இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிடவோ, பேருந்துகளை […]

You May Like