fbpx

’வேண்டாம்னு சொன்னா விடமாட்டீங்களா’..? தவெக நிர்வாகியின் காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..!!

தவெக நிர்வாகியின் காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சரவணன். இவர், அதே பகுதியில் வசித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், தன்னை காதலிக்க வேண்டுமென மாணவியை தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். இதுகுறித்து, மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, மாணவியின் தாயார், சரவணனின் பெற்றோரிடம் கூறி கண்டித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளி மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளா சரவணன். நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகமானதால், செய்வதறியாது திகைத்துப் போன மாணவி, மன உளைச்சலுக்கு ஆளாகி தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், தவெக நிர்வாகி சரவணன் மற்றும் அவரது சகோதரி சங்கீதா ஆகியோர் மீது பெண் குழந்தைக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சரவணனை கைது செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள அவரது சகோதரியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே புகார் கொடுத்தபோது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவியின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

Read More : பிரபல TCS நிறுவனத்தில் பணியாற்ற விருப்பமா..? சூப்பர் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

The incident of an 8th grade student committing suicide due to a love affair with a Thaweka administrator has caused shock.

Chella

Next Post

"ஒழுங்கா படி"!. தாய் கண்டித்ததால் விபரீத முடிவு!. 20வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!

Thu Feb 13 , 2025
Suicide: படிக்காமல் விளையாடிக்கொண்டிருந்ததை தாய் கண்டித்ததால், மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி, 20வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு காடுகோடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி வசிக்கின்றனர்.இவர்களது மகள் அவந்திகா, 15. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். இந்நிலையில், நேற்று மதியம் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த, அவந்திகா பாடம் படிக்காமல் இருந்து உள்ளார். […]

You May Like