fbpx

அடடா!…. பிரியாணி இலையில் இப்படி ஒரு அதிசயம் இருக்குதா?… இப்படி டிரை பண்ணுங்க! ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்!

பிரியாணி இலையில் உள்ள ஆண்டி – ஆக்சிடென்டுகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மன ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

சமையலறையில் நாம் பயன்படுத்தும் மசாலா பொருட்களில், பிரியாணி இலை ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த இலை உணவின் மணம் மற்றும் சுவையை மேம்படுத்த உதவுகிறது. இதை பார்ப்பதற்கு வெறும் இலை போல தெரிந்தாலும், இந்த இலையில் உள்ள ஆண்டி – ஆக்சிடென்டுகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாக உள்ளது. இந்தஇலையை நாம் உணவிற்கு மட்டும் தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால், இந்த இலை நமது மனதையும், நாம் சுவாசிக்கும் காற்றையும் சுத்தமாக வைக்க உதவுகிறது. இது எவ்வாறு சாத்தியமாகும் என சிந்திக்கிறீர்களா? வாருங்கள் பார்ப்போம்.

நாம் சமையலுக்காக பயன்படுத்தும் பிரியாணி இலையை எரித்த பிறகு, அதிலிருந்து வெளிவரும் புகை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும், ஒன்று அல்லது இரண்டு இலையை எரித்த பிறகு, அதிலிருந்து வெளிவரும் புகையானது நமது வீட்டை சுற்றும் காற்றை சுத்தமாக்குவதோடு, நமது மன நிலையையும் சீராக்க உதவுகிறது. இலையில் உள்ள யூஜெனோல் மற்றும் மைர்சீன் என்ற இரண்டு சேர்மங்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. எனவே பிரியாணி இலையை எரித்த பின் அதில் இருந்து வரும் வாசனையானது, மூளையின் நரம்புகளை ரிலாக்ஸ் அடைய செய்து, மன உளைச்சலை நீக்குகிறது. இந்த இலையில் இருந்து வரும் புகையானது ஒவ்வாமை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது தொண்டை மற்றும் மூக்கு பகுதியில் உள்ள வீக்கங்களை நீக்க உதவுகிறது. வீட்டில் துர்நாற்றம் வீசினால், இந்த இலையை எரிக்கும் போது அதில் இருந்து வெளி வரும் புகையானது துர்நாற்றத்தை நீக்குகிறது.

ஒரு பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று பிரியாணி இலையை எடுத்துக் கொண்டு அறையினுள் சென்று, ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்துக் கொண்டு, பிரியாணி இலையை எரித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். பின் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் அறைக்குள் சென்று, அந்த புகையை சுவாசிக்க வேண்டும். இவ்வாறு 5-7 முறை செய்தால், நமது உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், மன ஆரோக்கியமும் மேம்படுகிறது.

Kokila

Next Post

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மாதிரி உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும்.!

Sat Apr 8 , 2023
ஒரு வயது ஆகாமல் எந்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது என சில உணவுகளின் பட்டியல் காண்போம். புதுசா பெற்றோரான பலருக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பது கொஞ்சம் பெரிய சவாலாகத்தான் இருக்கும். அதிலும் தனிக் குடும்பத்தில் இருந்தால் அது இன்னும் கடினமான ஒன்றாக இருக்க கூடும் . குழந்தைப் பராமரிப்பு அவ்வளவு சின்ன விஷயம் இல்ல. அதுவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்று வரும் போது, பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் […]

You May Like