fbpx

கொளுத்தும் வெயிலுக்கு இதம் தரும் தயிர்!…. இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் பேராபத்து!… நிபுணர்கள் எச்சரிக்கை!

கோடை வெயிலுக்கு உடல் சூட்டை தணிக்க தயிர் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால், தயிருடன் குறிப்பிட்ட சில பொருட்களை சேர்த்து உண்பதால் உடல்நல ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொளுத்தும் வெயிலுக்கு மோர், தயிர், இளநீர், ஜூஸ் வகைகள் என உடலுக்கு குளுமை தரும் உணவுகளை மக்கள் சாப்பிடத் தொடங்கியுள்ளனர். தினமும் தயிர் சாப்பிடுவதால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும். ஆயுர்வேதத்தின்படி, தயிரில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. குளிர்ச்சியை தரக் கூடியது. வயிற்று புண்களை குணமாக்கும். சருமத்தை பராமரிக்கும். உடலில் நச்சு நீக்கியாக செயல்படும். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் நீங்கள் தயிரை கவனமாக சாப்பிட வேண்டும். தயிரை உண்ணும்போது செய்யும் சில தவறுகள் ஆரோக்கியத்தை பாதிக்கும். அது குறித்து இங்கு காணலாம்.

அதிக உடல் பருமன் கொண்டவர்கள், கபம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், இரத்தப்போக்கு கோளாறுகள் அல்லது வீக்கத்துடன் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தயிர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மீறி சாப்பிடும்போது உடல்நிலை மோசமாகும். மோராக குடிக்கும்போது செரிமானம் விரைவாக இருக்கும். ஆனால் தயிர் அப்படியல்ல, செரிமானம் ஆக நேரம் ஆகும். ஒருவேளை ஏற்கனவே உங்களுக்கு செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தால், தினமும் தயிர் சாப்பிடுவதை தவிருங்கள். செரிமான கோளாறு இருப்பின், அதிக தயிர் சாப்பிடும்போது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம்.

தயிரில் கொழுப்பின் அளவு மிக அதிகமாக காணப்படுகிறது. இதை அதிகமாக சாப்பிட்டால் உங்கள் எடை அதிகரிக்கும். எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்குகிறது. இதனால் முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இரவில் தயிர் சாப்பிடுவதால் உடலில் சோர்வு ஏற்படும். இது சளி தொந்தரவிற்கு காரணமாகும். ஆயுர்வேத தகவல்களின்படி, தயிரின் இனிப்பு, துவர்ப்பு பண்புகள் சளியை உருவாக்குகின்றன. இது சுவாச பிரச்சனைகள், நாசி நெரிசல், கீல்வாதம், வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. அதனால் இரவில் தயிர் எடுத்துக் கொள்ளக் கூடாது.

கோடையில் வெங்காயம் சாப்பிட வேண்டும் என வீட்டு நம் பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். கோடையில் வெங்காயம் சாப்பிடுவது வெப்ப பக்கவாதத்தைத் தடுக்கிறது. தயிர் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெங்காயம் வெப்பத்தை அதிகமாக்கும். இந்நிலையில், வெங்காயம், தயிர் ஆகியவற்றை சேர்த்து உட்கொண்டால், அது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மாம்பழம், தயிரின் பண்புகள் வேறுபட்டவை. இவை தனித்தனியாக நன்மைகளை அளிக்கும். இவற்றை ஒன்றாக உட்கொள்வது உடலில் நச்சுகளின் அளவை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.கடல் உணவுகளையும், தயிரையும் சேர்த்து உண்ணக் கூடாது. சிலர் சிக்கன், மீன் போன்ற உணவுகளை தயிருடன் கலந்து உண்ண விரும்புவார்கள். மீனில் புரதத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதைப் போல தயிரிலும் புரதம் அதிகம் காணப்படுகிறது. ஆனால் புரதத்தை அதிகமாக உட்கொள்ளும் போது, ​​நம் உடல் அதை ஜீரணிக்க திணறுகிறது. இதனால் வயிற்று வலி, அஜீரணம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

Kokila

Next Post

அதிகரிக்கும் கொரோனா வைரஸ்...! நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11- ம் தேதிகளில்...! மத்திய அரசு அதிரடி உத்தரவு...!

Sun Apr 9 , 2023
ஏப்ரல் 10, 11 ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும். அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாடினார். கொரோனாவின் முந்தைய பரவலின்போது செயல்பட்டது போல், தற்போதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும்” […]

You May Like