fbpx

தென்காசி மக்களே.. ஆட்சியர் அலுவலகத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்:  டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: 1, அலுவலக உதவியாளர்: 2 என மொத்தம் மூன்று காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி: 

* அலுவலக உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

* டேட்டா என்ட்ரி பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். தட்டச்சு (லோயர்) ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி MS ஆபீஸ் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்: டேட்டா என்ட்ரி பணியிடத்திற்கு மாதம் ரூ.15,000 மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.8000 வழங்கப்படும். இப்பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது ஆகும். இப்பணியிடம் 11 மாத காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இதற்கு விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 15 2025 கடைசி நாளாகும்.

Read more : “கோழி” பறவையா.. விலங்கா..? குஜராத் உயர் நீதிமன்றம் கூறியது என்ன..? அறிவியல் சொல்வது…

English Summary

You can apply for the vacant posts of Office Assistant, Data Entry Operator in Tenkasi District Collectorate.

Next Post

’குடும்பத்தில் இருந்து ஒரு ஓட்டு’..!! இளைஞர்களை குறிவைக்கும் தவெக..!! பிரசாந்த் கிஷோர் போட்ட ஸ்கெட்ச்..!! புஸ்ஸு ஆனந்துடன் முக்கிய ஆலோசனை..!!

Tue Feb 11 , 2025
It has been reported that Prashant Kishor has instructed the Tamil Nadu Victory Party to ensure one vote from each family.

You May Like