fbpx

இந்த பணியிடங்களுக்கு அக்.13 வரை விண்ணப்பிக்கலாம்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

சிறைத்துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணிக்கு அடுத்த 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது..

தமிழக சிறைத்துறையில் உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 13-ம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, காலியாக உள்ள சிறை அதிகாரி ஆண் (6), பெண் சிறை அதிகாரி (2) பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 22-ம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. காலையில் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு நடைபெறும். இது 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.. பிற்பகலில் தமிழ் தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கும், பொதுப்பாடத்தேர்வு 150 மதிப்பெண்களுக்கும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இவைதவிர நேர்காணல் மற்றும் பதிவு தொடர்பாக 80 மதிப்பெண்கள் என மொத்தம் 680 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.. இந்த தேர்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்..

Maha

Next Post

கவனம்... ஆயுள் காப்பீட்டு முகவர்கள் தேர்வுக்கு செப்டம்பர் 23-ம் தேதி அன்று நடைபெறும்...!

Wed Sep 14 , 2022
கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விற்பனை அனுபவம் உள்ளவர்கள் இந்த நேர் காணலில் கலந்து கொள்ளலாம். ராணிபேட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 23.09.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும். கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-லிருந்து 60 வரை இருக்க வேண்டும். சுய […]

You May Like