தன்னுடைய கள்ளக்காதலனுடன் தொடர்ந்து உறவில் இருக்க தடையாக இருக்கும் கணவருக்கு சூனியம் வைக்க மனைவி ரூ.59 லட்சம் வரை செலவு செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே அந்தேரி பகுதியைச் சேர்ந்த 39 வயதான தொழிலதிபர் ஒருவருக்கு 38 வயதில் ஒரு மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தொழிலதிபரின் மனைவி 13 ஆண்டுகளுக்கு முன்பு பரேஷ் கோடா என்பவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அவர்களது உறவு தொடர்ந்து உள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவ்விவகாரம் நாளடைவில் தொழிலதிபருக்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அதை பொருட்படுத்தாமல் பரேஷ் கோடா உடன் தொடர்ந்து செக்ஸ் வைத்து ஜாலியாக இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த மாதம் தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக தனது வீட்டில் உள்ள அலமாரியில் வைத்திருந்த சுமார் ரூ. 35 லட்சம் பணம் காணாமல் போனதைக் கண்டு தொழிலபதிபர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மனைவியிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டுபிடித்த தொழிலதிபர், நடந்த சம்பவம் அனைத்தையும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொழிலதிபரின் மனைவியை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், மனைவிக்கும் தொழிலதிபருக்கும் அடிக்கடி சண்டை வருவதால் விரக்தியடைந்த அவர், முன்னாள் காதலனுடன் சேர தடையாக இருக்கும் கணவர் தன் பேச்சை கேட்பதற்காக சூனியம் வைக்க ஜோதிடரான படால் சர்மா என்பவரை அணுகி உள்ளார். இவர் தொழிலதிபரின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகியவர். ஜோதிடரும் இந்த பிரச்சனையை தீர்ப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

தொழிலதிபர் மனைவிக்கும் ஜோதிடருக்கும் இடையில் கள்ளக்காதலன் பரேஷ் கோடா இடைத்தரகாக செயல்பட்டுள்ளார். ஜோதிடர் படால் சர்மா சூனியம் செய்வதற்கான கட்டணமாக தொழிலதிபர் மனைவியிடருந்து பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துள்ளார். இதுவரை ரூ.59 லட்சம் வரை ஜோதிடர் பறித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஜோதிடர் படால் சர்மா, கள்ளக்காதலன் பரேஷ் கோடா ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.