fbpx

”உங்களுக்கும் கண்டிப்பா இந்த பழக்கம் இருக்கும்”..!! ”ஆனா இனி விட்ருங்க”..!! ”பெரிய ஆபத்து காத்திருக்கு”..!!

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய பலரும் இயர்பட்ஸ் பயன்படுத்துவோம். சிலரோ தினமும் ஒரு முறையாவது பயன்படுத்துவார்கள். ஆனால், காதில் இயர்பட்ஸ்களை பயன்படுத்துவது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, உங்கள் காதுகளின் வெளிப்புற பகுதியை சுத்தம் செய்ய மட்டும் பட்ஸை பயன்படுத்தினால் போதும். காதின் உட்புறத்திற்கு பட்ஸ் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காதுகளுக்குள் உருவாகும் மெழுகு காதின் பாதுகாப்பிற்கு முக்கியமானது. இது தூசி, நுண்ணுயிரிகளை காதுக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. உங்கள் காதுகளின் வெளிப்புறத்தை சுத்தம் செய்ய இயர்பட்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லது. அதுவே, காதுகளின் உள் பகுதியை சுத்தம் செய்ய அதனைப் பயன்படுத்தும்போது, ​​அது காதுகளுக்குள் உருவாகும் மெழுகு ஆழமாக தள்ளுகிறது. இதனால் காதில் அடைப்பு ஏற்படும். காது வலி, காது கேளாமை போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உங்கள் காதுகளை சுத்தம் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. நீங்கள் குளிக்கும்போது காதுகளில் தண்ணீர் மற்றும் சோப்பு நுழைந்து தேங்கிய காது மெழுகுகளை தளர்த்தும் போது காதுகள் சுத்தம் செய்யப்படும். தளர்ந்த மெழுகு தானே வெளியே வரும். மெல்லுதல், கொட்டாவி விடுதல் மற்றும் பேசுதல் போன்ற உங்கள் தாடை அசைவுகளாலும் மெழுகு வெளியே தள்ளப்படுகிறது. இயர்பட்களை பயன்படுத்துவதால், மெழுகு இறுக்கமாக மாறி அடைப்பு ஏற்படலாம். இதனால் தலைச்சுற்றல், அரிப்பு, காது கேளாமை மற்றும் காதுகளில் வலி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்களது காதில் இயர்பட்களை பயன்படுத்துவதால் அது பாக்டீரியாவை உள்ளே செல்ல வழி செய்கிறது. இதனால் உங்களுக்கு வலிமிகுந்த நோய்த்தொற்றுகள் ஏற்படும். காது அடைப்பு, காது கேளாமை, காது வலி அல்லது காது பகுதியில் அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

Chella

Next Post

“இந்த வயசுல உனக்கு கள்ளக்காதல் தேவையா??” தாயை கண்டித்த மகன்; பின் நடந்த சோகம்..

Mon Sep 25 , 2023
குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் . இவரது தாய் வளர்மதி(எ)செல்வி, இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரது தாய் வளர்மதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரத் என்பவருருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களின் தகாத உறவு குறித்து நவீன் குமாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து நவீன் குமார் அவரது தாயை கண்டித்துள்ளார். இதனால் வளர்மதி […]

You May Like