மிக இளமையிலேயே ஒருவருக்கு தாடி வளர்ந்தால் வழுக்கை விழுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கைக்கின்றனர்.
இன்றைய இளைஞர்கள் தாடி மீது உள்ள காதல் அதிகரித்துள்ளது. அதனால் எண்ணெய் கிரீம்கள் என தாடிக்காகவே நிறைய பொருட்கள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையான முறையில் தாடி வளர்க்காமல், செயற்கையான முறைகளைப் பயன்படுத்தி இளைஞர்கள் தாடி வளர்த்து வருகிறார்கள். அவ்வாறு செயற்கை முறைகளை பயன்படுத்தி தாடி வளர்ப்பதால் மிக விரைவில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
செயற்கை முறையில் தாடி வளர்ப்பதற்காக பல க்ரீம்களை இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள். அது மிகவும் ஆபத்தானது. இயற்கையாகவே தாடி வளர்ந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு சில ஆண்களுக்கு இயற்கையாகவே தாடி வளரும். அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் 60 சதவீதம் ஆண்கள் செயற்கையாகவே தாடி வளர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.