fbpx

இளைஞர்களே..!! தமிழ்நாட்டில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நாளை தூத்துக்குடியில் உள்ள கோரம்பாளையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலையற்ற இளைஞர்களுக்காக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் கோரம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை (மே 12) தனியார் துறை வேலைவாய்ப்பு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது, நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் எக்கச்சக்கமான தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ என அனைத்து வேலையற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றிதலுடன் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் நேரில் சென்று கலந்து கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான முழு விவரங்களுக்கு 0461-2340159 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்பின் மாதிரி குறு தரவு குறித்த ஆராய்ச்சி...! மத்திய அரசு ஒப்பந்தம்...!

Thu May 11 , 2023
மக்கள் தொகை கணக்கெடுப்பின் மாதிரி குறு தரவு குறித்த ஆராய்ச்சிக்கான பணிக்கூடத்தை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகமும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் மாதிரி குறு தரவு குறித்த ஆராய்ச்சிக்கான பணிக்கூடத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த பணிக்கூடம் திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் நீலக்குடி வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது. ஆராய்ச்சி நோக்கங்களுக்காக […]

You May Like