fbpx

முதியவருடன் உல்லாசமாக இருக்கவிட்டு வீடியோ எடுத்த யூடியூப் பிரபலம்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தம்பதி..!!

கேரளாவில் 68 வயது முதியவருடன் உல்லாசத்தில் இருந்துவிட்டு வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய யூடியூப் தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த நிஷாத்-ராஷிதா தம்பதியினர், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் யூடியூபில் வீடியோக்கள் போட்டு வருமானம் பார்க்கலாம் என முயற்சித்துள்ளனர். ஆனால், இவர்களுடைய வீடியோக்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால், பணம் சம்பாதிக்க யோசித்து இருவரும் பக்காவாக பிளான் போட்டு முகநூல் பக்கத்தில் இருந்து வயதான வசதியான ஆட்களை தேட துவங்கி உள்ளனர்.

முதியவருடன் உல்லாசமாக இருக்கவிட்டு வீடியோ எடுத்த யூடியூப் பிரபலம்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தம்பதி..!!

அந்த வகையில் சிக்கியவர் தான் மலப்புறம் கல்பாகம்சேரி பகுதியைச் சார்ந்த வசதி படைத்த 68 வயது முதியவர். இவருக்கு ஸ்கெட்ச் போட தொடங்கிய ராஷிதா, தன்னை ஒரு டிராவல் Vlogger எனக்கூறிக் கொண்டு முதியவருடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பின்பு கணவரின் உதவியுடன் முதியவருடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனை கணவரும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தொடர்ந்து தனது கணவருக்கு தொழில் தொடங்க வேண்டும் என அவ்வப்போது முதியவரிடம் பணம் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதியவர் பணத்தை தர மறுத்துள்ளார். இதனால் இருவரும் எடுத்து வைத்திருந்த வீடியோவை காட்டி மிரட்டி ஒரு வருடத்திற்குள் முதியவரிடம் இருந்து ரூ.23 லட்சம் வரை பறித்துள்ளனர்.

முதியவருடன் உல்லாசமாக இருக்கவிட்டு வீடியோ எடுத்த யூடியூப் பிரபலம்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தம்பதி..!!

இந்த பணத்தை வைத்து தம்பதியினர் இருவரும் ஒரு கார் வாங்கி நாடு நாடாக சுற்றித்திரிந்து அதனை வீடியோ எடுத்து malay mallus என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து அவர்களது யூடியூப் வாசகர்கள் அதிகமானதால் முதியவரை தொடர்ச்சியாக மிரட்டி பணம் வசூலித்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளனர். இருவருக்கும் சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்த வீடியோக்களை அவர்களது யூடியூப்பில் பதிவிட்டுள்ளனர். நாட்கள் செல்ல செல்ல பணம் குறைந்து வருவது குறித்து முதியவரின் உறவினர்கள், அவரிடம் கேட்டுள்ளனர்.

முதியவருடன் உல்லாசமாக இருக்கவிட்டு வீடியோ எடுத்த யூடியூப் பிரபலம்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தம்பதி..!!

இதையடுத்து முதியவரும் நடந்த சம்பவத்தை அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 6 மாத கைக்குழந்தைகள் இருப்பதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், ராஷிதாவுக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கி, நிஷாத்தை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

#நெல்லை : காதல் செய்வதை விட மறுத்ததால் மகளை தாயே கொன்ற அவலம்..!

Thu Nov 24 , 2022
பாளையங்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பாலாமடையில் பேச்சி என்பவர் தனது மனைவி ஆறுமுககனி மற்றும் மகள் அருணா (19) ஆகியோருடன் வசித்து வருகிறார். பேச்சி சென்னை மாநகர் பகுதியில் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார்.  மகள் கோவையில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயின்று வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விடுமுறை கேட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். மேலும் இந்த பெண் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை […]
கள்ளக்காதலுக்கு இடையூறு..!! கணவர் கொலை..!! உடலை புதைத்த இடத்தில் செப்டிக் டேங்க்..!! பகீர் சம்பவம்..!!

You May Like