fbpx

மாணவி மரணத்தில் பொய் செய்திகளை ஒளிபரப்பிய யூடியூப் சேனல்கள் முடக்கப்படும்.. கள்ளக்குறிச்சி எஸ்.பி தகவல்..

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளதாக எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதுடன், மாணவர்களின் சான்றிதழ்களை தீ வைத்து எரித்தனர்.. இந்த விவகாரத்தில் 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளதாக எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.. மாணவி உயிரிழப்பு தொடர்பாக வதந்திகள். போலியான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகாவும் அவர் கூறியுள்ளார்.. 32 வகையான யு டியூப் பக்கங்கள், சமூக வலைதள பக்கங்களை கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

மேலும் மாணவி மரணத்தில் பொய் செய்திகளை ஒளிபரப்பிய யூ டியூப் சேனலை முடக்க நடவடிக்கை டுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.. பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியோ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

கல்லூரிகளில் சேர வரும் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..! உயர்கல்வித்துறை அறிவிப்பு

Fri Jul 22 , 2022
அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், மொத்தம் 92.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவனந்தபுரம் முதல் இடத்தையும், பெங்களூரு 2ஆம் இடத்தையும், […]

You May Like