ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசி குழாயில் இருந்து பெரும் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.. மாலிகிபுரம் மண்டலத்தில் உள்ள இருசமந்தா அருகே ஏற்பட்ட இந்த பெரும் எரிவாயு கசிவு காரணமாக, அருகிலுள்ள கிராமம் முழுவதையும் புகையால் சூழ்ந்துள்ளது. இந்த எரிவாயு கசிவின் மூலம் தீ விபத்து ஏற்பட்டதால் இருசுமண்டா பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது..
கிராம மக்கள் இந்தச் சம்பவம் குறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். குழாயில் இருந்து ஏற்படும் இந்த பெரும் எரிவாயு கசிவால் கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர். இங்கு மீண்டும் மீண்டும் எரிவாயு கசிவுகள் ஏற்படுவது குறித்து மக்கள் பீதி அடைந்துள்ளனர்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் வீடுகளை காலி செய்து வருகின்றனர்.
தீ விபத்து காரணமாக நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் எரிந்து வருகின்றன. அதிகாரிகளிடமிருந்து தகவல் கிடைத்ததும் ஓஎன்ஜிசி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒரு தனியார் நிறுவனம் 10 நாட்களுக்கு முன்பு எரிவாயு இருப்புப் பகுதியில் பணிகளைத் தொடங்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த எரிவாயு விபத்து குறித்து கேட்டறிந்தார். நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அருகில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மறுபுறம், எரிவாயு கசிவைத் தொடர்ந்து, சுற்றியுள்ள கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாரும் அடுப்பை பற்ற வைக்க வேண்டாம், மின் சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More : தியேட்டரில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா கண்டுபிடிப்பு..! இளைஞர் கைது..!



