BREAKING | இவர்களுக்கு பென்ஷன் தொகை ரூ.3,000ஆக உயர்வு..!! சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

1035559

தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்களுக்கான சேவைகளை முன்னின்று நடத்தும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களின் நீண்டகாலக் கனவு தற்போது நனவாகியுள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான ஓய்வூதியச் சலுகைகளை உயர்த்தி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


முதலமைச்சரின் இந்த புதிய உத்தரவின்படி, இதுவரை மாதம் 2,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஓய்வூதியம் (Special Pension), இனி 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். விலைவாசி உயர்வு மற்றும் முதுமைக்கால மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த 50 சதவீத உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய உயர்வு மட்டுமல்லாமல், ஊழியர்கள் தங்களது பணிக்காலம் முடிந்து விடைபெறும்போது வழங்கப்படும் பணிநிறைவு பணிக்கொடை (Ex-gratia payment) தொகையிலும் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது தமிழக அரசு. இதுவரை வழங்கப்பட்டு வந்த 50,000 ரூபாய் என்ற தொகையை, அப்படியே இருமடங்காக உயர்த்தி 1 லட்சம் ரூபாயாக வழங்க சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Read More : வெள்ளிக்கு வரப்போகுது யோகம்..!! 200 டாலரை தொடும்..!! Rich Dad Poor Dad ஆசிரியர் ராபர்ட் கியோசாகி புதிய கணிப்பு..!!

CHELLA

Next Post

“அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எதிர்கொள்ளாத நெருக்கடி எனக்கு உள்ளது.. ஆனால்..” சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

Sat Jan 24 , 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.. அப்போது 5 ஆண்டுகளில் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.. மேலும் “ ஆட்சி பொறுப்பேற்று 8,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது.. என்னுடைய இலக்கில் வென்று மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன்.. 2 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் […]
stalin assembly

You May Like