Breaking : ஷாக்..! ஒரே நாளில் ரூ.15,000 உயர்வு.. புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை..

gold price prediction

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.307க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து ரூ.3.07 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்..!! இனி கலெக்டர் ஆபீஸுக்கு அலைய தேவையில்லை..!! ஈசியா விண்ணப்பிக்கலாம்..!!

RUPA

Next Post

ஓட்டுநர் உரிம விதிகள் மாற போகுது.. இனி விதிமீறல்களுக்கு அபராதப் புள்ளிகள்.. முழு விவரம் இதோ..!

Wed Jan 14 , 2026
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான சேவைகளை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.. அதன்படி, இனி ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இனி மருத்துவச் சான்றிதழை வழங்க வேண்டியதில்லை; மேலும் போக்குவரத்து மீறல்களுக்கு ஓட்டுநர் உரிமங்களில் அபராதப் புள்ளிகள் பதிவு செய்யப்படும், மேலும் காப்பீட்டு பிரீமியங்களுடனும் இணைக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ​​இந்த இரண்டு மாற்றங்களும் மத்திய அரசால் […]
Driving Licence 2025

You May Like