Breaking : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் ஜன.30 வரை நீட்டிப்பு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

special revision voter list

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.


புதிய வாக்காளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள https://voters.eci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘New Voter Registration’ பகுதியைத் தேர்வு செய்து ‘படிவம் 6’-ஐப் (Form 6) பூர்த்தி செய்ய வேண்டும். ஏற்கனவே பட்டியலில் இருப்பவர்கள் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதியில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் ‘Correction of Entries’ பகுதிக்குச் சென்று ‘படிவம் 8’-ஐப் பயன்படுத்தலாம். இந்த எளிய டிஜிட்டல் முறை மூலம் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இதுவரை சுமார் 12.80 லட்சம் பேர் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அதே நேரத்தில், முறையான கள ஆய்வின் (SIR) அடிப்படையில், உயிரிழந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் என சுமார் 97 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி 5.43 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.. நேற்றுடன் அவகாம் முடிவடைந்த நிலையில் மேலும் 12 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று வரை 13,03,487 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..

ஜனவரி 30ம் தேதிக்கு பின் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படும். இது குறித்த முதற்கட்ட அறிவிப்புகள் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. அனைத்துச் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணிகளும் முடிவடைந்த பின், தமிழகத்தின் அதிகாரப்பூர்வமான ‘இறுதி வாக்காளர் பட்டியல்’ வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Read More : Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக்..! ஒரே நாளில் தாறுமாறு உயர்வு; புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை..!

RUPA

Next Post

கரூர் பெருந்துயரம்.. 2-வது முறையாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்..!

Mon Jan 19 , 2026
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை […]
vijay cbi

You May Like