BREAKING | இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கரூர் விரைகிறார் விஜய்..? கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை..!!

TVK Vijay 2025

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அவர்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலரும் அடங்குவர். மேலும், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இதற்கிடையே, தவெகவினர் யாரும் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாகவோ நிற்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இதுவரை எந்தவொரு நிதியுதவியும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தான், தவெக நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த மீண்டும் கரூருக்கு செல்வது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவது மற்றும் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

Read More : மணமேடை காணாமலேயே மண்ணில் மறைந்த சோகம்..!! விஜயை பார்க்க வந்த திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழப்பு..!!

CHELLA

Next Post

Flash | கரூர் துயர சம்பவம்..!! நடந்தது என்ன..? முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

Sun Sep 28 , 2025
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வரும் பிரச்சாரக் கூட்டத் தொடரின் 3ஆம் கட்டம் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடந்தது. ஆனால், கரூரில் கட்டுக்கடங்காத கூட்டத்தால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் பிரச்சாரத்துக்காக தொண்டர்களும் ரசிகர்களும், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும், அதிகாலை முதலே திரண்டு இரவு வரை காத்திருந்தனர். விஜய்யின் பிரச்சார வாகனம் […]
RN Ravi 2025

You May Like