ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள அந்தியூரில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் தேர்வு நடைபெற்றதில் சுமார் 1100 பேர் தேர்வு எழுதியுள்ளனர் . இந்த நிலையில் அதே மாவட்டத்தை சேர்ந்த வரதநல்லூரில் வசிக்கும் பட்டதாரியான ஹரிணி(24) என்ற பெண்ணிற்கும் வினோத் என்பவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கிராம உதவியாளர் தேர்வுக்கு ஹரிணி விண்ணப்பித்திருந்தார். மேலும் தான் தேர்வு எழுத விரும்புவதாக கணவரிடம் தெரிவித்துள்ளார்.அதற்கு சிறிதும் தயங்காமல் சம்மதம் தெரிவித்த கணவர் தனது மனைவியுடன் காரில் தேர்வு மையத்திற்கு சென்றிருக்கின்றனர். மனைவி தேர்வு எழுதும் வரை வினோத் வெளியே காத்திருந்துள்ளார். 11 மணி அளவில் தேர்வு முடிந்ததும் ஹரிணியுடன் வினோத் அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பினார்.
இவ்வாறு மணக்கோலத்தில் வந்து தேர்வு எழுதியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்பட செய்துள்ளது. அத்துடன் இவர்களை போல் மணக்கோளத்தில் மனைவியுடன் தேர்வு எழுத வந்த புதுமாப்பிள்ளை காலதாமதமாக தேர்வு மையத்திற்கு வந்துள்ளார். எனவே அவரை கண்காணிப்பாளர்கள் தேர்விற்கு அனுமதிக்கவில்லை. இதனால் புதுமன தம்பதி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.