இயற்கை முறையில் முகம் பொலிவாக!… இந்த பேஸ்ட்டை டிரை பண்ணுங்க! ஆண்களுக்கான அழகுக்குறிப்புகள்!

இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும் சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் .


கடலை மாவில் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக்கி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும்.புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.இதனால் முகம் புத்துணர்ச்சி பெறும் .தக்காளி பழத்தை பாதியாக நறுக்கி, அவற்றை கஸ்தூரி மஞ்சள் தூளில் விட்டு மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால் முகம் மிளிரும். சந்தனப் பொடியை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வர முகம் மிளிரும் .வேப்பிலையை அரைத்து மாஸ்க் போட்டுவந்தால் நல்ல நிறமாற்றம் கிடைக்கும் .பப்பாளி பழத்தை பேஸ்ட்டாக்கி அதனை பயன்படுத்தினால் புத்துணர்ச்சியுடன் கூடிய பளபளப்பு கிடைக்கும்.

1newsnationuser3

Next Post

கொளுத்தும் வெயில்!... இனி ஐஸ் க்ரீம்களுக்கு பதில் இதை சாப்பிடுங்கள்!... குளுகுளு நுங்குகடல்பாசி செய்வது எப்படி?

Sun Apr 30 , 2023
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் நுங்குகடல்பாசி செய்வது எப்படி என்று இதில் பார்ப்போம் . கோடை வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. சில நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வியர்வை கொட்டுகிறது. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் […]
nungu

You May Like