தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

தமிழ்நாட்டில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், அனைவரும் சொந்த ஊருக்கு திரும்ப இருக்கின்றனர். இதன் காரணமாக ஜூன் மாதம் இரண்டாவது வாரம் வரைக்கும் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகள் மற்றும் விமான கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது திருச்சி மற்றும் திருவனந்தபுரம் வரை செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணமாக ரூ.2700 வரை வசூலிக்கப்படுவதாகவும், கோவை ஆம்னி பேருந்தில் கட்டணம் ரூ.1400இல் இருந்து 2000 ரூபாய் வரைக்கும், தூத்துக்குடி மற்றும் கொச்சிக்கான டிக்கெட் ரூ.3000 வரைக்கும் வசூலிக்கப்படுகிறது.


அதேபோல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை செல்வதற்கான விமான முன்பதிவு கட்டணம் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாகவும் சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.8000 வரையிலும், சென்னையிலிருந்து கோவைக்கு ரூ.5000 வரை வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சிரமடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து மும்பை, டெல்லி, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான கட்டணமும் பல மடங்காக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

CHELLA

Next Post

பேருந்துக்காக காத்திருந்த மாணவி..!! தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கொலை..!! பாய்ந்தது குண்டர் சட்டம்..!!

Fri May 26 , 2023
14 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க நீலகிரி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அருகே பகல்கோடு பகுதியில் வசித்து வருபவர் குட்டன். இவர், தோடர் பழங்குடியினத்தை சார்ந்தவர். இவரது 14 வயது மகள் உதகை அருகே உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஒரு […]
பேருந்துக்காக காத்திருந்த மாணவி..!! தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கொலை..!! பாய்ந்தது குண்டர் சட்டம்..!!

You May Like