மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் என்ற தம்பதி மேகாலயாவை நோக்கி சென்ற ஹனிமூன் பயணம், தற்போது பெரும் மர்மமான வழக்காக மாறியுள்ளது. தம்பதியர் கடந்த மாதம் சில்லாங், சோஹ்ரா பகுதிகளில் ஹனிமூனுக்காக ஹோம் ஸ்டே விடுதிகளில் தங்கி இருந்தனர். மே 23 ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த ரூமில் இருந்து செக் அவுட் செய்த பின், சில நிமிடங்களிலேயே அவர்கள் மாயமானது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் ஈடுபட்ட நிலையில், ஜூன் 2ஆம் தேதி, ராஜா ரகுவன்ஷியின் உடல் ஜார்ஜ் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் மனைவி சோனம் பற்றிய தகவல் இதுவரை இல்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விசாரணையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, டூரிஸ்ட் கைடு ஆல்பர்ட் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மௌலாகைத் பகுதி டூரிஸ்ட் கைடு ஆல்பர்ட், “மாயமான நாள் அந்த புதுமண தம்பதியை பார்த்ததாக கூறியுள்ளார். அவர்களுடன் 3 ஆண்கள் இருந்தனர். நொங்கிரியாட் எனப்படும் கடினமான மலைப் பகுதியில் ஏறினர்.
ஹனிமூன் ஜோடியும், 3 ஆண்களும் மே 23 ஆம் தேதி காலை 10 மணியளவில் நொங்கிரியாட்டில் இருந்து மௌலாகைத் பகுதிக்கு 3,000 படிகள் ஏறி டிரெக்கிங் சென்றனர். அதற்கு முந்தைய நாள்.. அதாவது மே 22 ஆம் தேதியும் அவர்கள் அங்கு வந்தனர். அவர்களுக்கு சர்வீஸ் செய்வதற்காக நான் அணுகினேன். அவர்கள் எனது சர்வீஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பா வன்சாய் என்கிற மற்றொரு கைடை தேர்வு செய்தனர். என்று காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Read more: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6000-ஐ கடந்தது.. 24 மணி நேரத்தில் 6 பேர் பலி..!!