பைஜூஸ் நிறுவனம் ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலை இருந்து நீக்குவதாக பைஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம், நடப்பு ஆண்டில் வருவாய் வளர்ச்சியுடன் போராடி வருவதால், பொறியியல் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தளவாடக் குழுக்களில் இருந்து மேலும் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் பணிநீக்கத்தைத் தவிர்ப்பது போன்ற காரணங்களுக்காக நிறுவனம் சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்ததால், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.