வாட்ஸ் அப்பில் தெரியாத எண்ணிலிருந்து அழைப்புகள் வருகிறதா..? இனி கவலையே வேண்டாம்..!! புதிய அப்டேட்..!!

உலகின் மிகப்பெரிய சமூக ஊடகமான வாட்ஸ் அப்பில் (WhatsApp) தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் பிளாட்ஃபார்மில் அத்தகைய அழைப்புகளை தானாகவே முடக்க அனுமதிக்கிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள மெட்டா சேனலின் கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பை மேலும் தனிப்பட்டதாக்கும் மற்றும் பயனர்களுக்கு அதிக கட்டுப்பாட்டைக் கொடுக்கும் என்று கூறியுள்ளது.


இந்த அம்சம் சிறிது காலமாக பீட்டா சோதனையில் உள்ளது. ஆனால், இப்போது Android மற்றும் iOS ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கிடைக்கிறது. வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பை உங்கள் மொபைலில் நிறுவியுள்ளீர்களா? அல்லது கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் அப்டேட் செய்துள்ளீர்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாட்ஸ்அப்பின் நிலையான பதிப்பைக் கொண்ட Galaxy S23 Ultra மற்றும் Realme 11 Pro+ போன்ற போன்களில் இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது. இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பைத் திறக்கவும். அதில், மேல் வலது மூலையில் உள்ள (top right corner) மெனுவைக் கிளிக் செய்யவும். (settings) அமைப்புகளுக்குச் செல்லவும், தனியுரிமை (Privacy) என்பதைக் கிளிக் செய்யவும். அழைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். “தெரியாத அழைப்பாளர்களை அமைதிப்படுத்து” (Silence Unknown Callers) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். மெட்டா வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு வாரமும் புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. மேலும் அனுப்பப்பட்ட செய்திகளை 15 நிமிடங்கள் வரை திருத்தும் திறனை WhatsApp அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

போக்சோ வழக்கை தவறாக கையாண்ட விவகாரம்….! காரைக்கால் இன்ஸ்பெக்டர் அதிரடி பதவியிறக்கம்…..!

Thu Jun 22 , 2023
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் சிவகுமார். இவர் மீது போக்சோ வழக்கை தவறாக கையாண்டது, காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக கையெழுத்து போட வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது, கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விடுவித்தது என்று பல்வேறு புகார்கள் எழுந்தனர். இந்த குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களின் அடிப்படையில், இவர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இவர் மீது துரை ரீதியான விசாரணை நடந்தது அந்த […]
police

You May Like