கம்போடியா சூதாட்ட விடுதியில் தீ விபத்து- பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

தாய்லாந்து எல்லையில் உள்ள கம்போடியாவில் சூதாட்ட விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அங்கு தங்கி இருந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியதால், விடுதியில் தங்கியிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சிலர் விடுதியின் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் திணறினர்.


நள்ளிரவில் பிடித்த தீ அதிகாலை வரை எரிந்துகொண்டிருந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளனர். 57 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

KOKILA

Next Post

"2022க்கு குட் பை" கூகுள் டூடுலை கிளிக் செய்தால் காத்திருக்கும் சர்பிரைஸ்...

Sat Dec 31 , 2022
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கூகுள் நிறுவனம் புதிய டூடுலை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் மத்தியில் 2022ம் ஆண்டு இன்றுடன் விடைபெறும் நிலையில், புத்தாண்டை வரவேற்கவும், உற்சாகமாக கொண்டாடவும் உலக மக்கள் தயாராகி வருகிறார்கள். புத்தாண்டை வரவேற்க தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தலங்கள், ஹோட்டல்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில் பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்களில் கூகுள் நிறுவனம் அவ்வப்போது சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று […]
கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3,500 செம்மறி ஆடுகள்..! ஆம் உண்மைதான்..! ஏன் தெரியுமா?

You May Like