2 டன் எடை வரை சுமக்கும்..!! தூள் கிளப்பும் புதிய பொலிரோ பிக்அப்..!! அறிமுகம் செய்தது மஹிந்திரா..!!

இந்தியாவின் முன்னோடி வாகனத் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது மஹிந்திரா மோட்டார்ஸ். பயணிகள் வாகனம் மட்டுமின்றி, வணிகப் பயன்பாட்டு வாகனங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், மஹிந்திராவின் பிக்அப் வாகனம் ட்ரக் ரக வாகனங்களில் வெற்றிகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நகர்ப்புற சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் கொண்டு வரவும், தயாரிப்பு பொருட்களை கொண்டு செல்வதற்கும் இந்த வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Mahindra Bolero Maxx4

இந்நிலையில், புதிய மேம்பட்ட பொலிரோ மேக்ஸ் பிக்அப் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது மஹிந்திரா நிறுவனம். இந்த வாகனத்தின் பிக்-அப்பில் 2 டன் வரை சுமை ஏற்றலாம். அந்த அளவிற்கு பே லோட் கெபாசிட்டி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பிக்அப் வாகனம் HD சீரீஸ் மற்றும் சிட்டி என இரண்டு வேரியண்ட்டுகளாக வெளிவருகிறது. 1.3 டன்னாக இருந்த பே லோடு கெபாசிட்டி 2 டன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமை வைக்கும் கார்கோ பெட்டின் அளவும் 2050 மில்லிமீட்டர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அட்ஜஸ்டபிள் ஓட்டுநர் இருக்கை, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், எல்இடி டெய்ல் லேம்ப் என பல்வேறு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. 

வாகன டிராக்கிங், செல்லும் ரூட்டை பிளான் செய்து கொள்வது, ஹெல்த் மானிட்டரிங் என கனெக்டிவிட்டி அம்சங்களுக்கு குறைவே இல்லை. மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்அப்பில் எம்2டிஐ நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 80 பிஎச்பி திறனையும், 200 எம்எம் டார்க் பவரையும் வெளிப்படுத்க் கூடியது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இந்த எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சுமக்கும் திறன் 1.7 டன் தான். அதற்கேற்ற வகையில் கார்கோ பெட்டின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், முழுத்திறனில் சிட்டி சீரீசில் இருக்கும் எஞ்சின் லிட்டருக்கு 17.2 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்க கூடியது. இதனால் ஓட்டுநருக்கு செலவு குறையும்.

இந்த புதிய மஹிந்திரா மேக்ஸ் பிக்அப் வாகனங்கள் 7.85 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. மிக குறைவான முன்பணமாக 24,999 ரூபாய்க்கு முன்பதிவும் செய்யப்படுவதாக மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிக சுமை ஏற்றும் திறனோடு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பொலிரோ மேக்ஸ் பிக்அப் விற்பனையில் தூள் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CHELLA

Next Post

கடைசி நேரத்தில் செம ட்விஸ்ட்..!! மணப்பெண்ணின் தங்கையை திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை..!!

Fri May 5 , 2023
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான திருமண வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாப்பிள்ளை ராஜேஷ், அக்காவை திருமணம் செய்துக் கொள்ள வந்திருந்தார். திருமண ஊர்வலத்துடன் வந்த மணமகன் தனது வருங்கால மைத்துனியை மணந்தார். இந்த திருமணம் மஞ்சியில் உள்ள பபௌலி கிராமத்தில் நடைபெற்றது. அங்கு மணமகன் மற்றும் மணமகள் தரப்புக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டது. பின்னர், அங்கு வந்த போலீசார், மணப்பெண்ணின் தங்கையுடன் மணமகன் ராஜேஷை சேர்த்து […]
கடைசி நேரத்தில் செம ட்விஸ்ட்..!! மணப்பெண்ணின் தங்கையை திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை..!!

You May Like