பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம் வங்கியில் போடப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ரூ.1,000 வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது. பொங்கல் பரிசு தொகையை நேரடியாக வழங்குவதா அல்லது வங்கியில் போடுவதா உள்ளிட்ட நடைமுறை குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக இடம் பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.


தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அந்த கூட்டத்தொடரை சமீபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கவர்னர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கும். தமிழக சட்டசபை கூட இருக்கும் தேதி, கவா்னர் உரையில் இடம் பெறும் கருத்துகள் ஆகியவை பற்றியும் இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Newsnation_Admin

Next Post

வெளியான ஹால்டிக்கெட்...! தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு...! எல்லாம் ரெடியா இருங்க...!

Mon Dec 19 , 2022
சிறை அலுவலர்‌ பணிக்கு வரும் 26-ம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு சிறைப்‌ பணிகளில்‌ அடங்கிய சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தத்‌ துறையின்‌ சிறை அலுவலர்‌ (ஆண்கள்‌) மற்றும்‌ ஏறை அலுவலர்‌ (பெண்கள்‌) பதவிக்கான காலிப்பணியிடங்களில்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கான கணினி வழித்‌ தேர்வு 26-ம் தேதி முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌ நடைபெற உள்ளது. தேர்வு எழுத தற்காலிகமாக […]
tnpsc

You May Like