ஆவணி மாதத்தில் திருமணம், புதிய தொழில் தொடங்கலாமா..? சிறப்புகள் என்ன..? முக்கிய விரதங்கள் எப்போது..?

Avani 2025

அம்மன் வழிபாட்டிற்கே உரிய மாதமான ஆடி மாதம் முடிந்துவிட்டது. முழுமுதற் கடவுளாகிய விநாயகரையும், காக்கும் கடவுளான திருமாலையும், உலகிற்கே தந்தையாக விளங்கும் சிவனையும், வழிபடுவதற்கான ஆவணி மாதம் இன்று தொடங்கியுள்ளது. ஆவணி மாதம் தான் விநாயகரும், கிருஷ்ணரும் அவதரித்த மாதம் ஆகும்.


சூரியன் சிம்ம ராசியில் நிலைபெற்று வலிமை பெறும் இந்த காலக்கட்டத்தில், தொடங்கப்படும் எந்த காரியமும் சிறப்பாக முடியும் என்ற நம்பிக்கை. இதுவே, ஆவணிக்கு “சிங்க மாதம்” என்ற மறுபெயரும் உண்டு. ஆடிப் போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆவணி மாதம், ஆன்மீகப் பண்பாடுகளிலும் நம்பிக்கைகளிலும் தனி சிறப்பு பெற்றது.

ஆடி மாதம் திருமணம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆனால், ஆவணி மாதம் தொடங்கியதுமே அதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிடுவார்கள். ஏனெனில், ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்கள் தான். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்வார். நமக்கு ஆத்மபலத்தை கொடுப்பது சூரியன் தான். எனவே, ஆவணி மாதம் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் திருஅவதாரங்கள் நடைபெற்றன.

மாணிக்கவாசகர் வழிபட்ட திருமேனியை, இறைவன் குதிரைகளுடன் மதுரையில் ஒப்படைத்து அருளியதாகக் கூறப்படும் மாதம் ஆவணி தான். அதேபோல, மகாபலி மன்னனும் வாமன அவதார மூர்த்திக்கும் இடையில் நிகழ்ந்த மூன்றடி தானம், சிரவண துவாதசி நாளில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

திருவோண நட்சத்திரத்தில் (ஆவணி) சிரவண தீபம் ஏற்றப்படுவது, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அற்புத வழிபாடாகக் கருதப்படுகிறது. திருப்பதி திருமலையில், இந்நாளில் மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் சேவை செய்கிறார். அப்போது அங்கு 1008 நெய்விளக்குகள் ஏற்றப்படும் நிகழ்வும் நடைபெறும்.

ஆவணி மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள் :

* ஆவணி மூலம்

* ஆவணி ஞாயிறு

* ஆவணி அவிட்டம்

* வரலட்சுமி விரதம்

* புத்ரதா ஏகாதசி

* காமிகா ஏகாதசி

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் புதிதாகத் திருமணம் ஆன பெண்கள் மங்கள கௌரி விரதம் இருப்பார்கள். சனிக்கிழமை அன்று ஆண்கள் பெருமாளுக்காக விரதம் இருப்பார்கள். திங்கள் மற்றும் வியாழன் அன்று சிவ வழிபாட்டுக்காக சைவர்கள் தவம் செய்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகள் சூரிய வழிபாட்டுக்கு சிறந்த நாள். குறிப்பாக, காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் சூரிய ஹோரையின் நேரம் வருவதால், சூரிய நமஸ்கார பயிற்சியை தொடங்க இது சிறந்த தருணம் ஆகும்.

ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மீகப் பயிற்சிகளை அளித்தால், அவர்கள் அதில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளதாகவும் நம்பப்படுகிறது. யோக பயிற்சி, வேதம் பயிலுதல், சூரிய நமஸ்காரம் ஆகிய ஆன்மீக நெறிகளைத் தொடங்க சிறந்த காலம் இது.

அதேபோல், வீட்டில் கிரஹப்பிரவேசம் செய்ய, திருமணங்களை நடத்த, விவசாயத்தில் சாகுபடி செய்யும் முன்பட்ட ஒழுங்குகளை அமைக்க ஆவணி மாதம் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் விதைத்த பசுமைகள் வளர்ந்து நிறைவடையும் நேரம் என்பதால், விவசாயிகளுக்கும் இம்மாதம் ஓய்வும், உன்னதமும் சேரும் நாட்களாக அமைகின்றன.

சூரியன் வலிமை பெறும் இம்மாதத்தில், தீமைகள் அகலும், மங்களங்கள் மலரும் என்பதே நம்பிக்கை. இந்த ஆன்மீக ஒளியால் நிரம்பிய ஆவணி மாதத்தில், இறை அருளோடு இன்பம் நிறைந்த வாழ்க்கை அமைய பிரார்த்திப்போம்.

Read More : இந்த ஒரு உணவு உங்கள் உயிரையே பறிக்கும் ஆபத்தாக மாறலாம்..!! இளைஞர்களே உஷார்..!!

CHELLA

Next Post

ED ரெய்டு ஓவர்..!! அமைச்சர் வீட்டில் நடந்த திக் திக் நிமிடங்கள்..!! கடைசி நொடியில் ஐ.பெரியசாமி செய்த செயல்..!!

Sun Aug 17 , 2025
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான பதவி வகித்து வருபவர் ஐ.பெரியசாமி. இவரின், திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் உள்ள வீடு மற்றும் சென்னையில் உள்ள வீடு, எம்எல்ஏ குடியிருப்பில் அவரது மகனின் அறை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 11 மணி நேரம் வரை நீடித்தது. அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் திமுகவில் மாவட்ட செயலாளராகவும், பழனி எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். […]
Periyasamy 2025

You May Like