சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, வட்டி விகித திருத்தத்திற்குப் பிறகு, வங்கி இப்போது சேமிப்பு வங்கி வைப்புகளுக்கு 4% வரை வட்டியைப் பெற அனுமதி வழங்கியுள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 55 bbps வரை வட்டி உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகு கனரா வங்கியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான சேமிப்புக் கணக்கு நிலுவைத் தொகைகளுக்கு 2.90% வட்டி வழங்கப்படும், ரூ.5 கோடி வரையிலான இருப்புகளுக்கு 2.95% வட்டி விகிதத்தை வழங்குவதாகவும் கனரா வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலான சேமிப்புக் கணக்குகளுக்கு 3.05% வட்டியும், ரூ.100 கோடி முதல் ரூ. 200 கோடி வரை 3.50% வட்டி விகிதத்தை வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.