நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்து, மேற்குவங்க கடலோரப் பகுதியில் நிலவுகிறது. மகாராஷ்டிரா – கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை ஓரிரு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு பாஜக முன்னாள் தலைவர் மாநில அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் […]
பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல் பெற தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் […]
உங்கள் கண் முன்னே ஒரு சாலை இருந்து, அது திடீரென்று சில நிமிடங்களில் மறைந்துவிட்டால் எப்படி இருக்கும்? ஐயோ.. கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது, இல்லையா.. ஆனால் உண்மையில் அப்படி ஒரு விசித்திரமான சாலை இருக்கிறது. இந்த சாலை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தெரியும்.. மீதமுள்ள நேரத்தில் மறைந்துவிடும். அப்படிப்பட்ட சாலை எங்கே இருக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் உயர் தொழில்நுட்ப […]
மாநில தகுதித் தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்கள், அதற்கான சான்றிதழ்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மாநில தகுதித் தேர்வு (செட் தேர்வு) கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் […]
சமீப காலமாக நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், சில இடங்களில், திருமணத்திற்கு புறம்பான உறவுகள் காரணமாக ஏற்படும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் சம்பவங்கள் பெரும்பாலும் செய்திகளில் வருகின்றன. மற்ற நேரங்களில்.. ஊசிகள் காரணமாகவும், ஒருவர் பயன்படுத்தும் பிளேடுகளை மற்றொருவர் பயன்படுத்துவதாலும் கூட எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சூழலில், மேகாலயா அரசு சமீபத்தில் ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. மேகாலயா மாநிலத்தில் அதிகரித்து வரும் எச்.ஐ.வி. […]
பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்த , நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திட்டம் அமலுக்கு வருகிறது. பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் பயன்கள், இந்தாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு கிடைக்கும். ரூ.99,446 கோடி மதிப்பிலான இந்த ஊக்கத்தொகை திட்டம், நாட்டில் 2 ஆண்டு காலத்துக்கு 3.5 கோடிக்கும் மேற்பட்ட […]
கம்போடியாவுடனான மோதல்கள் அதிகரித்து வருவதால், தாய்லாந்து எட்டு எல்லை மாவட்டங்களில் அவசரகால நிலையை அறிவித்து, இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது, மோதல்கள் அதிகரிக்கும் போது குடிமக்கள் பயணத்தைத் தவிர்க்கவும், விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் பல வாரங்களாக நீடித்த மோதலுக்குப் பிறகு வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது பதினொரு தாய்லாந்து பொதுமக்களும் ஒரு சிப்பாயும் கொல்லப்பட்டனர். இதை […]
கார்கில் போரின் வெற்றிக்கான வேர், நம் நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இந்த வேர்களால், கார்கிலில் அறுவடை செய்த வெற்றியின் வெள்ளி விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கார்கிலில் அப்படி என்ன நடந்தது….? போர் மூண்டது எதற்காக…? என்ற வரலாறை, கால் நூற்றாண்டு பின்னோக்கிப் பார்க்கலாம்.. இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக பிரிக்கப்பட்ட காலம்தொட்டே, இரு நாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது இரு நாடுகளுக்கும் சண்டைகளும் நடைபெற்று வந்திருக்கின்றன. அவற்றில் 1999-ம் […]
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது.. ஆனால் இந்த பணியால் புலம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இந்த பணி இன்றுடன் முடிவடைந்த […]

