சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்!… தமிழக பாடத்திட்டத்தில் இருந்து வெளியேறியது புதுச்சேரி!

வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழக பாடத்திட்டத்தில் இருந்து புதுச்சேரி வெளியேறியது.


வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதால், தமிழ் பாடத்திட்டத்தில் இருந்து புதுச்சேரி வெளியேறியது. இதனால் கட்டாய பாடமாக இருந்த தமிழ், இனி விருப்ப பாடமாக தேர்வு செய்யும் முறை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.புதுச்சேரியில் இதுவரை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக பாடத் திட்டத்தின் படி பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்த சமயத்தில், தற்போது புதுச்சேரி மாநிலத்தில் வரும் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்கள் தங்களது விருப்ப மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் மொழியை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்கலாம், ஏனாமில் தெலுங்கு, மாஹேயில் மலையாள மொழியை விருப்ப பாடமாக 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

KOKILA

Next Post

பெண்களே கவனம்!... ரெட் ஒயின் குடிப்பவர்களா நீங்கள்?... அப்போ உங்களுக்கான பதிவு இதோ!

Tue May 30 , 2023
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. தற்போது சிவப்பு ஒயின் நன்மைகள் பற்றி இங்கு காணலாம். ஆல்கஹால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்பட்டாலும், கருப்பு திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு ஒயின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. மருந்தாக உட்கொள்ளும் போது இது நிகழ்கிறது. சிவப்பு ஒயினில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-சி உள்ளது. கூடுதலாக, இதில் ரெஸ்வெராட்ரோல் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது […]
ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

You May Like