ஓராண்டு கால வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகால வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அஞ்சலக கால வைப்புத்தொகை, என்எஸ்சி (தேசிய சேமிப்புச் சான்றிதழ்) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் இன்று முதல் 1.1 சதவீதம் வரை உயர்த்தியது மத்திய அரசு. பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பெண் குழந்தை சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரித்தி மீதான வட்டி விகிதங்கள் இந்த முறை மாற்றப்படவில்லை.
புதிய அறிவிப்பின் படி தேசிய சேமிப்புச் சான்றிதழுக்கு இன்று முதல் முதல் 7 சதவீத வட்டி விகிதமும், தற்போது 6.8 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேபோல், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் தற்போது 7.6 சதவீத வட்டிக்கு எதிராக 8 சதவீத வட்டி வழங்கப்படும்.
PPF என குறிப்பிடப்படும், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 சதவீதம் என்ற அளவில் இருந்து மாற்றம் செய்யப்படவில்லை. பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனாவின் வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவே தொடர்ந்து நீடிக்கிறது.