சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பெயர் சூட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பேசி வருகின்றார். அதில் இன்று பேசியபோது செப்டம்பர் 28ம் தேதி வீரர் பகத்சிங்கின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு சண்டிகர் விமான நிலையத்தில் பகத்சிங் விமான நிலையம் என பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார்.
செல்போன்கள் தயாரிப்பில் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தி மையமாக வளர்ந்துள்ளது. பாலித்தீன் பையை நாம் குறைக்க வேண்டும். இதற்கு மாற்றாக இயற்கையான சணல் , பருத்தி , வாழை நார் போன்றவற்றால் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி அதை ஊக்குவிக்க வேண்டும்.
தூய்மைஇந்தியா திட்டத்தின் கீழ் நகரை தூய்மையாக வைத்துக் கொள்வதில் பெங்களூரு மீரட் நகரங்கள் மேற்கொண்ட முயற்சியை நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திரமோடி பாராட்டினார். இதனால் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு கால நிலை மாற்றம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.