திடீரென முடங்கிய ChatGPT.. உலகம் முழுவதும் பயனர்கள் அவதி..! என்ன காரணம்..?

Chatgpt

பிரபலமான செயற்கை நுண்ணறிவு தளமான சாட்ஜிபிடி இன்று முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் தவிப்புக்கு உள்ளாகினர். உலகளாவிய அளவில் OpenAI வழங்கும் முக்கிய சேவைகள் அனைத்தையும் பாதித்துள்ளது. இதனால் எக்ஸ் தளத்தில் பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர்.


ChatGPT உரையாடல் இடையூறு காரணமாக, பயனர்கள் பலர் தங்கள் வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ChatGPT சில நேரங்களில் பதிலைத் துவக்கி பாதியிலேயே நிறுத்திவிடுகிறது மற்றும் மிகவும் தாமதப்படுத்துகிறது. பயனர்கள் பல முறை login செய்யும்படி அவசியம் ஏற்பட்டுள்ளது. இது verification loop என அழைக்கப்படுகிறது. Sora பயன்படுத்தும் பயனர்கள், வீடியோ ஜெனரேஷனில் கடுமையான தாமதங்களை சந்திக்கிறார்கள். இதில் பல ongoing coding tasks முற்றிலும் நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரச்சனையை எப்போது சரி செய்வோம் என்று ஓபன் ஏஐ நிறுவனம் இன்னும் கூறவில்லை. திடீரென முடங்கியதற்கான காரணத்தையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஓபன் ஏஐ அறிவிக்கவில்லை. பயனர்கள் சமூக வலைதளங்களில் ஏஐ முடங்கியதாக தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Read more: Flash : குட்நியூஸ்.. 2 நாட்களாக ஆட்டம் காட்டிய தங்கம் விலை இன்று குறைந்தது.. நகைப்பிரியர்கள் நிம்மதி!

English Summary

ChatGPT suddenly stopped working.. Users all over the world are suffering..! What is the reason..?

Next Post

Breaking : பெரும் பரபரப்பு.. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை..

Wed Sep 24 , 2025
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றிரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. மோப்ப நாய் உதவி உடன் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே சோதனையின் முடிவில் இது வெறும் புரளி […]
admk off bomb

You May Like