மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்று மட்டும் ரூ.400 உயர்வு.. வெள்ளி விலையும் புதிய உச்சம்..

20220728085912 Francis Wedding Ornaments 2 1

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.74,000 விற்பனை செய்யப்படுகிறது..

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது..

அந்த வகையில் கடந்த வாரம், தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த வாரம் மட்டும் 3,000 வரை தங்கம் விலை உயர்ந்தது.. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்தில் சற்று குறைந்தது. அதன்படி, சென்னையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்தது. குறிப்பாக. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ. 73,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றும் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.9250க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.74,000 விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.122க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,22,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் சாமானிய மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : மக்கள் தொகை கணக்கெடுப்பு: குடிமக்கள் பதிலளிக்க வேண்டிய 30 முக்கிய கேள்விகள் என்னென்ன..?

RUPA

Next Post

வெப்பத்தால் புற்றுநோயை குணப்படுத்தும் நானோ-கப்...! அசத்திய ஆராய்ச்சியாளர்கள்..‌!

Wed Jun 18 , 2025
வெப்பத்தால் புற்றுநோயை குணப்படுத்தும் நானோ-கப்களை ஒருங்கிணைக்க ஒரு எளிமைப்படுத்தப்பட்ட முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க ஒளிவெப்ப சிகிச்சை (PTT) உடன் உதவும் பாலிஎதிலீன் கிளைகோல் (PEG) உடன் பகுதியளவு மூடப்பட்ட நானோ-கப் உருவ அமைப்பைக் கொண்ட தனித்துவமான ஷெல் அமைப்பைக் கொண்ட நானோ துகள்களுக்கான தொகுப்பு முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் […]
jpg 1

You May Like