பயங்கர அலர்ட்…! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…! புயலாக வலு பெறக்கூடும்…!

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இது அடுத்த 8 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலு பெறக்கூடும்.


இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஈரோடு, சேவம், பெரம்பதூர், கடலூர், அரியலுார், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கருர். மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி தென்காசி, திருநெல்வேலி, கண்ணியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் உரிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூார். திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை தஞ்சாயூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

வேற லெவல்...! விவசாயிகளே ரூ.70,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம்...! தமிழக அரசு தகவல்...

Thu Oct 20 , 2022
விவசாயிகளின்‌ வருமானத்தை உயர்த்துவதற்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகளின்‌ வருமானத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி, நடப்பு 2022-23 ஆம்‌ ஆண்டில்‌ தமிழக சட்டமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட இரண்டாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில்‌, நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்‌ எனும்‌ தலைப்பில்‌,பயிர்‌ சாகுபடியுடன்‌, கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்‌ கோழிகள்‌, தீவனப்‌பயிர்கள்‌, மரப்பயிர்கள்‌, தேனீ […]
tn goverment farments

You May Like