#Rain: கீழடுக்கு சுழற்சி காரணமாக 18-ம் தேதி வரை மழை தொடரும்…! வானிலை மையம் கணிப்பு…!

கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வாடகை வீட்டில் வசிக்கும் நபர்களா நீங்க...? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்...!

Tue Nov 15 , 2022
வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நிம்மதி தரும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு மாதிரி குத்தகை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. புதிய சட்டத்தை உருவாக்குவதன் மூலமோ அல்லது தற்போதுள்ள குத்தகைதாரர் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதன் மூலமோ இதை செயல்படுத்தலாம். அந்த வகையில் மாதிரி குத்தகை சட்டத்தில், மாநிலங்களில் தொடர்புடைய அதிகாரத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவு உள்ளது. வாடகை சொத்துகள் தொடர்பான எந்தவொரு சர்ச்சையையும் விரைவாகத் தீர்ப்பதற்கு வாடகை நீதிமன்றங்கள் […]
வாடகை வசூலிக்க வீட்டு உரிமையாளர்களுக்கு தடை..! சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

You May Like