பயணிகளுடன் வெடித்த தமிழக அரசு பேருந்து.. சிதம்பரத்தில் பரபரப்பு.!

சீர்காழிக்கு சென்னையில் இருந்து சிதம்பரம் வழியே அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நள்ளிரவு நேரத்தில் சிதம்பரத்திற்கு வந்தபோது பயணிகள் கீழே இறங்கி கடைகளுக்கு சென்றனர்.


ஐந்து பயணிகள் மட்டும் பேருந்தில் இருந்தனர். இதை தொடர்ந்து சீர்காழியை நோக்கி பேருந்து புறப்பட தயாரான நேரத்தில் பின்புறம் இருக்கும் டீசல் டேங்க் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பயணிகள் மற்றும் நடத்தினர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடியுள்ளனர்.

சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரசு பேருந்தில் பொதுமக்கள் பயணித்த நேரத்தில் டீசல் டேங்க் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

1newsnationuser5

Next Post

ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.5,000..!! இவர்களுக்கு மட்டும் ரூ.95,000..!! தமிழக அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

Mon Nov 14 , 2022
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும். வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4800 வழங்கப்படும் […]
ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.5,000..!! இவர்களுக்கு மட்டும் ரூ.95,000..!! தமிழக அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

You May Like