சீர்காழிக்கு சென்னையில் இருந்து சிதம்பரம் வழியே அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நள்ளிரவு நேரத்தில் சிதம்பரத்திற்கு வந்தபோது பயணிகள் கீழே இறங்கி கடைகளுக்கு சென்றனர்.
ஐந்து பயணிகள் மட்டும் பேருந்தில் இருந்தனர். இதை தொடர்ந்து சீர்காழியை நோக்கி பேருந்து புறப்பட தயாரான நேரத்தில் பின்புறம் இருக்கும் டீசல் டேங்க் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பயணிகள் மற்றும் நடத்தினர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடியுள்ளனர்.
சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரசு பேருந்தில் பொதுமக்கள் பயணித்த நேரத்தில் டீசல் டேங்க் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.