மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்..

89d0b90eeae3f7667c4a73f4e47e3983 original 1

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே அன்றைய தினம் தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் உரிய தேதியில் 19 முறையும், கால தாமதமாக 61 முறையும், முன்கூட்டியே 11 முறையும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


2011 முதல் 2019 வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகள், கால தாமதமாகவே மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் உரிய தேதியிலும், 2022-ம் ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. 2023-ம் ஆண்டு உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் கால தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114 அடியாக இருந்ததால் உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான நீரை முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து 92வது ஆண்டாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலைக்குள் இது 12,000 கன அடியாக உயரும். மேட்டூர் அணையின் தண்ணீர் திறப்பின் மூலம் காவிரி படுகையின் விவசாயிகள் பயன்பெறுவர். திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் இந்த தண்ணீர் மூலம் 20 மாவட்டங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

Read More : தொன்மத்துக்கு ஒரு நீதி.. தொன்மைக்கு ஒரு நீதியா..? எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது..!! – மத்திய அரசை சீறிய வைரமுத்து

English Summary

Tamil Nadu Chief Minister M.K. Stalin today released water from the Mettur Dam for delta irrigation.

RUPA

Next Post

Gold Rate: ரூ.73 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இப்படியே போனால் என்னதான் ஆகும்.!!

Thu Jun 12 , 2025
சென்னையில் இன்றைய (ஜூன் 12, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்திய மக்களின் சேமிப்பில் தங்கம் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் தான், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஆட்டம் காட்டி வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் […]
gold 4 1

You May Like