முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பெறக்கூடிய சிகிச்சைகள் மற்றும் அந்த சிகிச்சைகளை வழங்கும் அரசு, தனியார் மருத்துவமனைகள் குறித்த தகவல்களை கைபேசி செயலி வாயிலாக தெரிந்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
இதற்கான செயலியை தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் (TNHSP) உருவாக்கி வருகிறது. இந்த செயலி வரும் மூன்று வாரங்களில் Google Play Store மற்றும் Apple App Store-ல் பதிவிறக்கம் செய்யக்கூடியதாக வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செயலியின் சிறப்பம்சங்கள்:
- காப்பீட்டுத் திட்டத்திற்கான டிஜிட்டல் அட்டை விண்ணப்பிக்கும் வசதி
- நபரது முகவரி அடிப்படையில் அருகிலுள்ள தகுதி பெற்ற மருத்துவமனைகள் பட்டியல்
- எந்த மருத்துவமனை எத்தகைய சிகிச்சைகளை வழங்குகிறது என்பதை பார்வையிடும் வசதி
- ஒரு நபருக்கு ஒதுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை விவரங்கள்
- பெறப்பட்ட சிகிச்சையின் பரிசோதனை, அறுவை சிகிச்சை, மருந்து உள்ளிட்ட பிரிவுகள் தொடர்பான தகவல்கள்
தற்போதைய நிலை:
- 1.48 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்
- ஆண்டுக்கு ஒருவர் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்
- 8 வகை உயர் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது
- 942 அரசு + 1,215 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 2,157 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன
- மொத்தம் 2,053 வகையான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன
- கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5,500 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன
பல தனியார் மருத்துவமனைகள், குறிப்பாக உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு பின்னால் ஓடுவதைத் தவிர்த்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் காப்பீட்டு அட்டை இருந்தும் முழு பலன் பெற முடியாமல் உள்ளனர். இந்த குறைபாடுகளை சரி செய்ய, புதிய செயலியின் மூலம் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் முயற்சி இது.
இதுதொடா்பாக தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் டாக்டா் எஸ்.வினீத் கூறியதாவது: தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் முதல்வா் காப்பீட்டுத் திட்ட கைப்பேசி செயலியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. தகுதியான எவரும் அதன் வாயிலாகவே விண்ணப்பித்து காப்பீட்டு அட்டையை டிஜிட்டல் முறையில் பெறலாம். அதன் பின்னா், அவா்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் எவையெல்லாம் முதல்வா் காப்பீட்டின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
சிகிச்சை விவரங்கள் குறித்தும் தகவல் பெறலாம். இதைத் தவிர, பயனாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை விவரங்களையும் கைப்பேசியில் அறிந்துகொள்ளலாம். முதல்வா் காப்பீட்டு திட்ட சேவைகளில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
Read more: வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சென்னையில் பார்கிங் கட்டணம் ரத்து..!! – மாநகராட்சி அறிவிப்பு



