#Breaking : சிறுவன் கடத்தல் வழக்கு.. ஜாமீன் மனு தள்ளுபடி.. பூவை ஜெகன்மூர்த்தி கைதாகிறாரா?

vikatan 2023 07 aee22018 3ae4 4227 8ab8 9450dd11ba58 64c3606354054

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பு, “ஜெகன் மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும். ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், விசாரணையில் ஜெகன் மூர்த்தியின் பதில் தெளிவாக இல்லை. ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் கொடுத்தால் அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார்.


அப்போது பூவை ஜெகன் மூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கிற்கும் பூஜை ஜெகன்மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக கூறினார்.

அதன்படி இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்த நீதிமன்றம் பூவை ஜெகன்மூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளூபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே சிபிசிஐடி போலீசார் விரைவில் ஜெகன்மூர்த்தியை விரைவில் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

வழக்கின் பின்னணி :

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத்திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர், தங்கள் மகளை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்தின் சென்று, பின்னர் பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பெண்ணின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தன்னையும் காவல்துறையின் கைது செய்யலாம் எனக்கூறி ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இதனிடையே சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபியை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரும் ஆஜராகவில்லை எனில் கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஜெயராமன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது..

இந்த உத்தரவை எதிர்த்து ஜெயராமன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை வேறு நீதிபதி அமர்வு விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. மேலும் சஸ்பெண்ட் உத்தரவில் தலையிட முடியாது என்றும் கூறியிருந்தது. ஏடிஜிபி ஜெயராமன் மீதான ஆள்கடத்தல் வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More : #Breaking : புதுச்சேரி அமைச்சர் திடீர் ராஜினாமா.. புதிய அமைச்சர் யார்?

RUPA

Next Post

சத்தமே இல்லாமல் இந்தியாவுக்கு எதிராக சீனா செய்த ‘மோசமான’ செயல்.. உண்மையை உளறிய பாகிஸ்தான் அமைச்சர்..

Fri Jun 27 , 2025
இந்தியாவுடனான இராணு மோதல்களின் போது, ​​தங்களுக்கு முக்கியமான உளவுத்துறை தகவல்களை சீனா வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்த காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய விவரங்கள் இந்தத் தகவலில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.. ஒரு நேர்காணலில், இந்தியாவுடனான ஒரு குறுகிய மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்ததாகவும், இந்தியாவின் […]
khwaja asif 1751022426 1

You May Like