தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகை அமலா பால்.. இந்த நிலையில் நடிகை அமலா பால் கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலுக்கு சென்றுள்ளார்.. ஆனால் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அமலா பாலுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.. எனவே அவர் கோவிலுக்கு வெளியே சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.. நடிகை அமலாபால் கோவிலின் வருகைப் பதிவேட்டில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்..
அவரின் பதிவில் “2023 ஆம் ஆண்டிலும் மதப் பாகுபாடு இருப்பது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. என்னால் சாமியின் அருகில் செல்ல முடியவில்லை, ஆனால் தூரத்திலிருந்து தரிசனம் செய்தேன். மத பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என நம்புகிறேன். மதத்தின் அடிப்படையில் இல்லாமல் நாம் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கான நேரம் வரும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..
இதனிடையே கோயில் நிர்வாகி ஒருவர் பேசிய போது“ கோவிலை தரிசிக்க வேற்று மதத்தினர் பலர் வந்துள்ளனர்.. அவர்களை பற்றி வெளியே தெரியாததால் பிரச்சனை இல்லை.. இருப்பினும், ஒரு பிரபலம் வந்தால், அது சர்ச்சைக்குரியதாக மாறும்.. கோயிலில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது.. அதனால் தான் அமலா பாலை அனுமதிக்கவில்லை, ”என்று தெரிவித்தார்..