fbpx

மீண்டும் திரையரங்குகளில் ஆள வரும் ’ஆளவந்தான்’..!! வெளியான மாஸ் அறிவிப்பு..!!

தமிழ் சினிமாவில் தற்போது பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் டிரெண்ட் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், நடிகர் ரஜினியின் பாபா திரைப்படம், டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டு, அதில் சில காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டு கடந்த மாதம் அவரின் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. புது படங்களுக்கு நிகராக இப்படம் வசூலித்து இருந்தது. இந்நிலையில், கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் தற்போது ரீ-ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் கடந்த 2001இல் ரிலீஸ் ஆனது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா தான் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு கமல்ஹாசன் திரைக்கதை அமைத்து இருந்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் அந்த சமயத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இப்படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி தற்போது அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். இதற்கான அறிவிப்பையும் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போஸ்டர் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவர், “விரைவில் திரையரங்கில் உங்கள் உள்ளங்களை ஆள வருகிறான்” என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தை உலகமெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட உள்ளதையும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் ஆகும் தமிழ் படம் என்கிற சாதனையை ஆளவந்தான் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Chella

Next Post

சொகுசு காரில் வந்த வடக்கன்ஸ்.. பிடித்து விசாரித்ததில்.. அதிர்ச்சி.!

Wed Jan 25 , 2023
நாமக்கல் பகுதி காவல்துறை ஆய்வாளர் சங்கர பாண்டியன் தலைமையில் நாமக்கல் To திருச்சி ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சொகுசு கார் குஜராத் மாநில பதிவு எண்ணுடன் திருச்சி நோக்கி வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த வாகனத்தில் பயணித்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரேமா […]

You May Like