கதையை கேட்கும் போது எனக்காக கதையை கேட்ட மாட்டேன்.. ஒரு ரசிகனாக தான் அந்த கதையை கேட்பேன் என்று நடிகர் அதர்வா கூறியுள்ளார்.
சென்னை தி.நகர் ஷா சூன் ஜெயின் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ’ட்ரிக்கர்’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா, இயக்குநர் சாம் ஆண்டன், தயாரிப்பாளர் ஸ்ருதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அதர்வா, ”இதுபோன்ற கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு சென்றாலே எனர்ஜி வந்து விடும். வீட்டுக்குச் சென்ற பிறகு எனது கல்லூரி நாட்கள் நினைவுக்கு வரும். இது மற்ற படங்களைப் போல சாதாரண ஆக்ஷன் படமாக இருக்காது. கல்லூரி மாணவன் போன்ற கதாபாத்திரத்தில் விரைவில் நடிக்க உள்ளேன். அதற்கான கதையை கேட்டுள்ளேன். விரைவில் அது நடக்கும். தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. நான் என் கல்யாணத்தின்போது அழ மாட்டேன்.
![திருமணம் குறித்து மனம் திறந்த நடிகர் அதர்வா..! என்ன சொன்னார் தெரியுமா?](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/atharvaa-murali-200.jpg)
கதையை கேட்கும் போது நான் எனக்காக கதையை கேட்ட மாட்டேன். ஒரு ரசிகனாக தான் அந்த கதையை கேட்பேன். தினமும் நிறைய சிறந்த இயக்குனர்கள், நடிகர்கள் வருகின்றனர். இவர்களுடன் தான் வேலை செய்ய வேண்டும் என்று ஒருவரை சொல்ல முடியாது. நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சமீபத்தில் நான் பார்த்த ’விக்ரம்’ படம் எனக்கு மிகவும் பிடித்தது”. இவ்வாறு அவர் பேசினார்.