fbpx

நடிகர் சூர்யாவின் மாமனார், மாமியார் இவர்கள்தான்..! திடீரென ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் பலருக்கும் பிடித்தமான , இன்னும் சொல்லப்போனால் பலருக்கு ரோல் மாடலாகவும் இருக்கக்கூடிய ஜோடி என்றால் அது சூர்யா – ஜோதிகா ஜோடிதான்.

கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படம் மூலம் முதன் முதலில் அறிமுகமான இந்த ஜோடி , அதன் பிறகு நட்பு, காதல் என வெவ்வேறு படிநிலைகளை அடைந்தது. ஆரம்பத்தில் ஜோதிகாவிடம் எது உங்களை கவர்ந்தது என கேட்டதற்கு, “அவர் தனது உதவியாளர்கள் முதல் படக்குழுவனர் வரை அனைவரிடம் ஒரே மாதிரான அன்போடு இருந்தார்“ என்றா சூர்யா. இதே கேள்வியை ஜோதிகாவிடம் கேட்டபோது , “ அவர் பெண்களிடம் பேசுவதற்கு வெட்கப்படுவார்“ அதுதான் முதலில் எனக்கு பிடித்திருந்தது என்றார். பல வருடங்களாக எதிர்ப்பு, போராட்டம் என தொடந்து கொண்டிருந்த காதல் , ரொம்ப ஸ்ட்ராங்கானது. இதனை ஒரு மேடையில் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார் கூறியிருந்தார். பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சூர்யா-ஜோதிகாவுக்கு திருமணம் நடந்தது.

நடிகர் சூர்யாவின் மாமனார், மாமியார் இவர்கள்தான்..! திடீரென ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்..!

திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் அன்பான குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் இந்த தம்பதிகள். வருடங்கள் ஓடினால் என்ன , ”உன் மேல் நான் கொண்ட காதல்.. என் மேல் நீ கொண்ட காதல்.. எதை நீ உயர்வாக சொல்வாயோ?” என்ற வரிகளுக்கு ஏற்ற மாதிரியாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். சூர்யா – ஜோதிகா ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பிற்கு எத்தனையோ மேடைகளை உதராணமாக சொல்லலாம். விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜோதிகா, சூர்யா குறித்து கேட்ட கேள்விக்கு “அதற்கு தனியாக ஒரு நிகழ்ச்சிதான் நடத்தனும். அவரை பற்றி சொல்ல அவ்வளவு இருக்கு“ என்றார்.

நடிகர் சூர்யாவின் மாமனார், மாமியார் இவர்கள்தான்..! திடீரென ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்..!

ஜோதிகா காதலை பற்றி ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்க ”காதல் என்பது சுயநலமற்றவராக இருப்பது, உங்களுக்குத் தேவையானதை விட மற்றவருக்கு என்ன தேவை என்பதைப் பற்றி அதிகம் சிந்திப்பது… உங்களை விட உங்கள் துணைக்கு அதிக இடம் கொடுப்பது, அதுதான் அன்பு” என்றார். எனக்கு நிறைய பேரை தெரியும்.. ஆனா சூர்யா போல யாருமே இல்லை. அதனாலதான் நான் சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என தன் காதலின் ஆழத்தை வார்த்தையாக உதிர்த்தார் ஜோதிகா.

நடிகர் சூர்யாவின் மாமனார், மாமியார் இவர்கள்தான்..! திடீரென ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்..!

இந்நிலையில், அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்துடன் மும்பை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் உணவகத்தில் இருந்து வெளியே வரும்போது பாலிவுட் பத்திரிகையாளர்கள் புகைப்படங்களாக எடுத்து குவித்துவிட்டனர். இப்படி அவர்களின் புகைப்படம் ஒருபக்கம் வைரலாக ஜோதிகாவின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது. இவர்களின் புகைப்படத்தை இணையவாசிகள் தற்போது அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Chella

Next Post

’ஆம், அது உண்மைதான்’..! திருமணம் குறித்து மனம் திறந்த கௌதம் கார்த்திக்..! பெண் யார் தெரியுமா?

Fri Aug 19 , 2022
நடிகர் கௌதம் கார்த்திக் முதன் முறையாக திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.  நடிகர் கௌதம் கார்த்திக் சமீபத்தில் பொன்குமார் இயக்கத்தில் ஆகஸ்ட் 16 1947 படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. சுதந்திர போராட்ட பின்னணியில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கௌதம் கார்த்திக்கிற்கு இந்தப் படம் வெற்றிப் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை டீசர் அளித்துள்ளது. இந்நிலையில், […]
’ஆம், அது உண்மைதான்’..! திருமணம் குறித்து மனம் திறந்த கௌதம் கார்த்திக்..! பெண் யார் தெரியுமா?

You May Like