தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக பிக்பாஸ் உள்ளது. இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், விரைவில் 7-ஆவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் எளிதில் பிரபலமாகி விடுவர். அதோடு சேர்த்து பல சர்ச்சைகளிலும் சிக்கி விடுவார்கள். அந்தவகையில், பிக்பாஸ் பிரபலமாக திகழ்ந்து வந்த மீரா மிதுன் வெளியே வந்தும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி படு ஆபாசமாக ட்வீட்களை போட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
குறிப்பாக, கடைசியில் பட்டியலினத்தவர் பற்றி பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் ஜாமீனில் வெளிவந்த நிலையில், தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியாத அளவிற்கு தலைமறைவாக உள்ளார். அதேபோன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறம் வெல்லும் என பேசி வந்த விக்ரமன் பெண்கள் மேட்டரில் சிக்கி பெரும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டுள்ளார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
அதாவது நிகழ்ச்சியில் நல்ல போட்டியாளர்களை தேர்வு செய்யுங்க என்றும் டிஆர்பிக்காக கிரைம் ரேட் போட்டியாளர்களை கொண்டு வந்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என விமர்சித்து வருகின்றனர். இவ்வாறாக பிக்பாஸ் பிரபலங்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகின்ற நிலையில், ஒரு சில நடிகர்கள், மற்றும் நடிகைகள் அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தும் வர முடியாது என்று தவிர்த்து வருகின்றனர்.