fbpx

உதவியாளருடன் பங்களாவில் தங்கியிருந்த நடிகை கனகா..!! கமலுக்கு பயந்து ’நோ’ சொன்னது ஏன்..? பயில்வான் பரபரப்பு தகவல்

தமிழ் சினிமாவில் 90-ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவர் கனகா. இவர், சமீப காலமாக லைம் லைட்டில் இல்லாமல் இருக்கிறார். அதற்கான காரணம் குறித்து சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவலை கூறியுள்ளார்.

அதாவது, கனகா தன் முதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை. கமலுடன் நடித்தால் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றும், அது மகளின் இமேஜை பாதிக்கும் என அவரின் தாய் நினைத்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். கமலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கனகாவுக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், அதை கனகா மறுத்துவிட்டார். பின்னர் கனகாவுக்கு காதல் ஏற்பட்டது. அவர் யாரைக் காதலித்தார் என்பது இன்னும் யாருக்கும் தெரியாத ரகசியமாகவே உள்ளது.

அவர் தனது காதலனுடன் சில காலம் ஒன்றாக வாழ்ந்தது மட்டுமின்றி, காதலனுடன் வெளிநாடு சென்றுவிட்டார். அதற்கு பிறகு அவர் கனகாவை பார்க்க வரவில்லை. கனகா தனிமையில் இருந்தார். கனகாவின் தாய் கட்டிய பங்களாவில் உதவியாளருடன் தங்கியுள்ளார். யார் இண்டர்வியூவுக்கு போனாலும் வெளிச்சத்துக்கு வரவும், பேசவும் தயாராக இல்லை என சொல்கிறாராம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார். கனகா வீட்டில் சண்டை ஏற்பட்டு, போலீஸ் வந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பது வழக்கம். சமீபத்தில் அவர் தங்கியிருந்த வீடு தீப்பிடித்த போது கூட அங்கு வந்த தீயணைப்பு வீரர்களிடம் கனகா தேவையில்லாமல் சண்டையிட்டுள்ளார். அந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, கனகாவுக்கு மனநலப் பிரச்னை இருந்ததா என்ற கேள்வி மீண்டும் எழத் தொடங்கியது. ஆனால் கனகா யாரையும் தன் வீட்டிற்கு வந்து பேச விடவில்லை. சிகிச்சை எடுக்கவும் அவர் தயாராக இல்லை. எப்போதுமே தனியாக இருப்பதையே விரும்புகிறார். காதலனுக்காக காத்திருக்கிறாள் என்பதுதான் அதற்கு பதில்” என்றார் பயில்வான்.

Chella

Next Post

இந்த விருதுக்கு நீங்கள் தகுதியானவரா..? 15ஆம் தேதிதான் கடைசி..!! ரூ.2 லட்சத்துடன் தங்கமும் கிடைக்கும்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

Tue Aug 29 , 2023
திருவள்ளுவர் விருதினை பெற விரும்பும் தமிழறிஞர்கள் ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-க்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2023-க்கான 74 விருதுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, திருவள்ளுவர் விருது மகாகவி பாரதியார் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, காமராசர் விருது, பேரறிஞர் அண்ணா விருது பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், […]

You May Like