சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல நடிகை லட்சுமி பற்றி பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். ”நடிகை லட்சுமி, மோகன் என்பவரை பிரிவதற்கு முன்பே லட்சுமிக்கு திருமணம் ஆகியிருந்தது. பாஸ்கர் என்கிற சேலத்துக்காரரை தான் லட்சுமி முதலில் திருமணம் செய்தார். அவர் உச்ச நடிகையாக இருந்த போது பாஸ்கர், அவரை திருமணம் செய்து கொண்டார். பாஸ்கருக்கு பிறந்தது தான் ஐஸ்வர்யா. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.
பாஸ்கர் சேலத்திலேயே இருந்துவிட்டார். அதன் பின் மோகனை திருமணம் செய்து கொண்டார் லட்சுமி. மோகனுக்கு பிறகு சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சட்டப்படி லட்சுமிக்கு மொத்தம் 3 கணவன்கள். இப்போது, ஐஸ்வர்யா லட்சுமியுடன் இல்லை. தி.நகரில் உள்ள தந்தை பாஸ்கரின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு தான், தன்னுடைய மகளுடன் ஐஸ்வர்யா இருக்கிறார்.
நடிகர் பிரசாந்த், கிரகலட்சுமியை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு தான், கிரகலட்சுமி விவாகரத்து பெற்றவர் என்பது பிரசாந்துக்கு தெரியவந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து கிடைத்தது. ‘ஐ ஆம் சிங்கிள்’ என்று தான் பிரசாந்த் சொல்லிக் கொண்டிருக்கிறார். கிரகலட்சுமி கல்யாணம் பண்ணாங்களா என்று தெரியாது. இயக்குனர் விஜய், அமலா பால் பிரியக்காரணம் அமலா பால் தான். இரவு 12 மணிக்கு அமலா பால் மது அருந்தி வந்துள்ளார். போதாக்குறைக்கு ஒரு நடிகரிடம் இருந்து அடிக்கடி போன் வருகிறது. ஒழுங்கீனமற்ற நடவடிக்கையில் தொடர்ந்து அமலா இருந்ததால், இருவரும் பிரிந்தனர்.
இப்படி தான் செல்வராகவன்-சோனியா அகர்வால் விவகாரம். ஆனால், இவர்கள் விவகாரத்தில் செல்வராகவனிடம் தான் பிரச்சனை. அதனால் வாழ முடியாமல் சோனியா விவாகரத்து பெற்றுவிட்டார். சோனியா அகர்வால், சிகரெட், மது பழக்கம் கொண்டவர். வீட்டில் அதை பலரும் எதிர்த்தனர். ‘நான் இந்த பழக்கத்தில் இருப்பது உனக்கு தெரியும் தானே’ என செல்வாவிடம் சோனியா கேட்க, அப்படி தான் அவர்களின் பிரிவு நடந்தது” என்று அந்த வீடியோவில் பயில்வான் பேசியுள்ளார்.