தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு முன்னணி நடிகை தான் சிம்ரன். ஒவ்வொரு நடிகைகளும் சில விஷயங்கள் மூலம் பிரபலம் அடைவார்கள். அப்படி நடிகை சிம்ரன் இடுப்பழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சிம்ரன், இப்போது கிடைக்கும் ரோல்கள் பிடித்தால் நடித்து வருகிறார். அதேபோல் சென்னையில் ரெஸ்டாரன்ட் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். சிம்ரன் உடன் பிறந்தவர்களில் ஒருவர் தான் மோனல்.

இவர் தமிழில் பார்வை ஒன்றே போதுமே, பத்ரி, லவ்லி, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தி மற்றும் கன்னடத்திலும் ஒரு படங்கள் நடித்திருக்கிறார். நாயகியாக இவருக்கு நல்ல பட வாய்ப்புகள் வந்த நேரத்தில், கடந்த 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வி தான் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.